இரண்டு ஆடுகள்
எங்களிடம்
ஒரு நூல் நிலையம் இருந்தது.அதை இவர்கள் எரித்தார்கள்.
எங்களிடம்
ஒரு தேவாலயம் இருந்தது.
அதை இவர்கள் தரை மட்டமாக்கினார்கள்.
எங்களிடம்
எங்கள் நிலம் இருந்தது.
அதை இவர்கள் ஆக்கிரமித்தார்கள்.
எங்களிடம்
ஒரு புகையிரதம் இருந்தது.
அதை இவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
எங்களிடம்
எங்கள் வளங்கள் இருந்தன.
அதை இவர்கள் அபகரித்தார்கள்.
எங்களிடம்
ஒரு பாடசாலை இருந்தது.
அதை இவர்கள் குண்டுவீசி அழித்தார்கள்.
எங்களிடம்
ஒரு மிருகக்காட்சிச் சாலை இருந்தது.
அதை இவர்கள் நிர்மூலமாக்கினார்கள்.
இப்போ
மீண்டும் எல்லாவற்றையும்
பெரும் விளம்பரங்களோடு
திரும்பக் கொண்டு வருகிறார்கள்.
எங்களிடம்
எங்கள் பிள்ளைகள் இருந்தன.
அவர்களை இவர்கள் இன்னும்
தரவே இல்லை.
எங்கள் பிள்ளைகளுக்கு பதிலாய்
இவர்கள் தருவதாக சொல்கிறார்கள்
இரண்டு ஆடுகள்.
---xxx----
தீபிகா
12.52 Pm.
13.10.2014