More than a Blog Aggregator

Jul 1, 2013

நான் இன்னும் சாகவில்லை


நான் இன்னும் சாகவில்லை


பூக்களுக்காய் காத்திருக்கிற 
மலர்வளையங்களே
அஞ்சலிக்காய் காத்திருக்கிற 
அழுகைச் சொற்களே
பழையபடம் தேடி பதிவி்ட காத்திருக்கிற 
பதிவர்களே
RIP எழுதக் காத்திருக்கிற 
கருத்தாக்களே
சிறப்பு நிகழ்ச்சி தயார்ப்படுத்தி வைத்திருக்கிற 
தொலைக்காட்சியே
பின்னணி இசைக்கக் காத்திருக்கிற 
இழுவை ஒலியே
அட்டைப்படத்துடன் புத்தகம் அச்சிட
குறிப்பெடுக்கிற ஆசிரியரே
இடத்தை மிச்சம் வைத்திருக்கிற 
தினசரிகளே
விழிகளுக்குள் தேங்கியிருக்கிற 
கண்ணீர்த் துளிகளே

தயவுசெய்து 
கொஞ்சம் பொறுமையாயிருங்கள்.
நான் இன்னும் சாகவில்லை.


---xxx---

தீபிகா
27-06-2013
8.24 Am.

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல வரிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

என்னாச்சி...?

Post a Comment